கொச்சி அணிக்கு பிசிசிஐ ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!
ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 101மி.மீ. அளவிலான மழை பதிவாகியதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ராதேஷியாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பருவமழையானது ஒருவாரம் முன்னதாகத் தொடங்கியுள்ளதாக, அவர் கூறியுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் மற்ற இடங்களில் நேற்று (ஜூன் 17) முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், ராஜஸ்தானின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதாகவும்; இதனால், கிழக்குப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!