செய்திகள் :

Genelia: ``10 மணிநேர வேலை என்பது சாத்தியமானதே..." - ஜெனிலியா ஓப்பன் டாக்

post image

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் 'ஸ்பிரிட்'. இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார்.

ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி படத்தில் நடிக்க வந்திருக்கிறார். தீபிகா படுகோனே, இத்திரைப்படத்திலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

அதில் ஒன்று, தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதினால் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த பணி நேரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீபிகா படுகோனே நினைத்தபடி சரிவராததால், அவர் 'ஸ்பிரிட்' திரைப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்பட்டது. இது திரைத்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் அமீர் கான், நடிகை ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில் 'சிதாரே ஜமீன் பர்' என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜெனிலியா,``10 மணிநேர வேலை என்பது கடினம்தான். ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன்.

இயக்குநர் அதை 11 மணி, 12 மணி நேரமாக நீட்டிக்கச் சொல்லும் நாள்களும் இருக்கிறது. ஒரு இயக்குநரின் தேவைக்கு ஏற்றார்போல, வேலை நேரத்தை சில மணி நேரம் அதிகப்படுத்திக்கொள்ளக் கேட்பது நியாயமானது என்று நினைக்கிறேன்.

Genelia Deshmukh
Genelia Deshmukh

ஆனால் அந்த மாற்றங்களைச் செய்ய நமக்கு நேரம் கிடைக்க வேண்டுமே... அது இல்லாத சூழலால்தான் சிக்கல்கள் ஏற்படுகிறது. எல்லா நாள்களும் வேலை நேரத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒருசில நாள்கள் நமக்கு அதிக நேரம் வேலை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். இது இரு தரப்புக்கும் மத்தியில் புரிதலுடன் செய்ய வேண்டிய ஒன்று" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின், கெளரி கான்..! - ரெஸ்டாரன்ட் தொழிலில் முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனு... மேலும் பார்க்க

``பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே அல்ல" - கொந்தளித்த அமீர் கான்

2007-ம் ஆண்டு அமீர் கான் இயக்கி நடித்த படம் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இந்த... மேலும் பார்க்க

Aamir Khan: "என் கனவுப் படமான மகாபாரதம்தான் என் கடைசிப் படமா?" - நடிகர் ஆமீர் கான் பதில்

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் புதிய படமான 'சிதாரே ஜமீன் பர்' வரும் ஜூன் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.ஆமீர் கான் நேர்காணல் ஒன்றி... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: ``விமானி என் நண்பர்தான்"- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் ... மேலும் பார்க்க

Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?

தயாரிப்பாளரும் தொலைக்காட்சி அதிபருமான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப் கூறிய "மாமியார் மருமகள் கதைகள்" விமர்சனத்துக்காக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதமாகியிருக்கும் இந... மேலும் பார்க்க

Aamir Khan: ``நானும் மணிரத்னமும் இணைய வேண்டிய படம்..'' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே நல்ல நட்புறவு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை. ஷாரூக் கான், அபிஷேக் பச்சன்... மேலும் பார்க்க