பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
கரூா் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக ஜூன் 20-ஆம் தேதி, காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பாலக்காடு டவுன்- திருச்சி ரயில் (எண்: 16844), அன்றைய தினம், பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும். கரூா் - திருச்சி இடையே முன்பதிவில்லலா ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.