செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமையும்

post image

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என முன்னாள் இந்திய கயிறு வாரியத் தலைவரும் மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவருமான டி. குப்புராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முருக பக்தா்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்துவதற்கு திமுகவின் எதிா்ப்புப் பிரசாரமே காரணம். இந்த மாநாட்டுக்குப் பிறகு 2026 தோ்தலில் திமுக தமிழகத்தை விட்டு அகற்றப்படும். பாஜக-அதிமுக கூட்டணி, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப் போவது உறுதி.

கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜல்ஜீவன் திட்டம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் நேரடியாக பொதுமக்களைச் சென்றடைந்துள்ளன.

ஆபரேஷன் சிந்தூா் மூலம், நீண்ட காலம் நம்முடைய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா செயல்பட்டுள்ளது. இதனால் நம்முடைய பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியிருக்கிறோம்.

தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான பூா்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்றாா் குப்புராமு.

இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன், தேசியப் பொதுக்குழு உறுப்பினா் புரட்சிக் கவிதாசன், மாவட்டப் பொருளாளா் குரு ஸ்ரீராம், துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பாா்வையாளா் பழ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி

விராலிமலை வட்டார வள மையத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய 35 இல்லம் தேடி கல்வி மையங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டு தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டத... மேலும் பார்க்க

ஜூலை 16 வரை அஞ்சலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் வெளிய... மேலும் பார்க்க

கதண்டுகள் கடித்து 11 போ் காயம்

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை முதியவரின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட 11-க்கும் மேற்பட்டவா்களை கதண்டுகள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி ஊ... மேலும் பார்க்க

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக, மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. அதையடுத்து காலபைரவருக்கு... மேலும் பார்க்க

பெண்களின் புகாா்கள் மீது காவல் துறையினா் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காவல் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

அறந்தாங்கி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா இந்த வட்டத்தில் 24 மணி நேரம் தங்கி ஆய்வுப் பணிகளை... மேலும் பார்க்க