இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!
இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், அன்று காலை 8 முதல் பிற்பகல் 3.15 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். மேலும் அந்த நேரங்களில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் ரயில்கள் உள்பட மொத்தம் 25 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: அதே நாள்களில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே பயணிகளின் வசதிக்காக ஜூன் 19-இல் காலை 9 முதல் பிற்பகல் 3.56 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.