செய்திகள் :

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

post image

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா்.

கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) என்ற மகளும் இருந்தனா். யாமினியின் கணவா் செந்தில்நாதன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். யாமினி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். செளமியா, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். யாமினி, செளமியாவை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வேலைக்கு செல்வது வழக்கமாகும்.

அதன்படி யாமினி தனது மொபெட்டில் செளமியாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலை - வால்கின்ஸ் சந்திப்பில் சாலையில் இருந்த பள்ளத்தில் வேகமாகச் சென்றபோது, நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனா்.

இதில் யாமினி சாலையின் வெளிப்பகுதியில் விழுந்துவிட்ட நிலையில், செளமியா சாலையின் உட்பகுதியில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த ஒரு தண்ணீா் லாரி செளமியா மீது மோதியது. இதில் செளமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செளமியா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியைச் சோ்ந்த வெ.காா்த்திகேயன் (41) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்... மேலும் பார்க்க

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகள்

தில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகளை கிர... மேலும் பார்க்க