நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழா செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 22639/22640) ஜூன் 25 முதல் ஆக. 26 -ஆம் தேதி வரையும், திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 12695/12696) ஜூன் 27 முதல் ஆக.28 -ஆம் தேதி வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசிக்கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது.
அதேபோல், தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 22657/22658) புதன்கிழமை முதல் ஆக.28 வரையும், செங்கோட்டை செல்லும் சிலம்பு அதிவிரைவு ரயிலில் (எண்: 20681/20682) ஜூன் 19 முதல் ஆக.28 -ஆம் தேதி வரையும் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 3 படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொது பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.