செய்திகள் :

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

post image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் தாய், தந்தையை இழந்து லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என உருக்கமாக தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், குழந்தைகளை காப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்யும் என கூறினார்.

ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் அருகே விமானம் விபத்துக்குள்ளான பிறகு 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விமான விபத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ள டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன், இந்த விபத்து டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் முழு ஆதரவையும் உறுதியளித்தவர்,

இதயத்தை நொறுக்கும் விஷயம் இது. விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூற எனக்கு வார்த்தைகள் இல்லை, ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் தூக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். இப்போதும் எதிர்காலத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் மட்டுமே நாம் செய்ய முடியும்.

குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானலும் உதவி செய்வேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க லண்டனில் இருந்து இந்தியா வந்து, விமான விபத்தில் தந்தையையும் இழந்து லண்டனில்

நிர்கதியாக நிற்கும் 4, 8 வயது குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என

உருக்கமாக தெரிவித்த சந்திரசேகரன், குழந்தைகளை காப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கை வைத்தபோது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததில்... மேலும் பார்க்க

கரூர்: பிரபல ரௌடியை சுட்டுப்பிடித்த போலீஸார்!

கரூர்: கரூரில் காவல்துறையினரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரௌடி பென்சில் தமிழழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின... மேலும் பார்க்க

சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு க... மேலும் பார்க்க

15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம்

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதை விரைவுபடுத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையாக, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் 15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது தெ... மேலும் பார்க்க

சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) ஞா... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து 74,120-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த இரு நாள்களில் பவுனுக்கு ரூ.960 குறைந்தது. அதைத்தொடா்ந்து, புதன்... மேலும் பார்க்க