செய்திகள் :

Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

post image

குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டது.

ஆனால், விமானமானது டேக் ஆஃப் ஆன அடுத்த சில நிமிடங்களிலேயே, விமான நிலையத்துக்கு அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி வளாக அடுக்குமாடி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் விபத்து நடந்த பகுதியில் 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத் விமான விபத்து
Ahmedabad plane crash

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணிநேரங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்தார்.

இந்த நிலையில், டைம்ஸ் நவ் (Times Now) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பேசியிருக்கிறார்.

அந்த நேர்காணலில் சந்திரசேகரன், "இது மிகவும் வேதனையான நேரம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை.

எங்கள் விமானங்களில் ஒன்றில் இத்தகைய துயர சம்பவம் நடந்ததற்கு டாடா குழுமத்தின் தலைவராக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வரும் நாள்களில் சாத்தியமான எல்லா வழிகளிலும் ஆதரவளிப்பதும், அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதும்தான் நாம் அனைவரும் செய்யவேண்டும்." என்று கூறினார்.

டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்

தொடர்ந்து விபத்துக்கான காரணம் தொடர்பாக அடிபடும் பேச்சு குறித்து பேசிய சந்திரசேகரன், "சிலர் இதை மனிதத் தவறு என்று கூறுகிறார்கள். சிலர் இயந்திரக் கோளாறு என்கிறார்கள்.

இன்னும் சிலர் விமான பராமரிப்பு குறைபாடு என்கிறார்கள். ஆனால், எனக்கு கிடைத்த தகவலின்படி, விமானத்தின் செயல்பாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை.

விமானத்தின் வலதுபுற இன்ஜின் புதியது. கடந்த மார்ச்சில்தான் அது பொருத்தப்பட்டது.

இடதுபுற இன்ஜின் 2023-ல் சர்வீஸ் செய்யப்பட்டது. அதன் அடுத்த சர்வீஸ் இந்த ஆண்டு டிசம்பரில்தான். எனவே, இரண்டு இஞ்சின்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லை.

கேப்டன் சபர்வால் 11,500 மணிநேரங்களுக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர். கிளைவ் குந்தர் 3,400 மணிநேரங்களுக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர்.

என்னிடம் பேசியவர்கள் அனைவரும், இவ்விருவரும் திறமையானவர்கள், வல்லுநர்கள் என்று கூறினர்.

இப்போது, விபத்து தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் (cockpit) குரல் பதிவு ஆகியவை உண்மை என்னவென்று நமக்கு விளக்கும்.

அதுவரை எந்தவொரு அவசர முடிவுக்குச் செல்வதை நாம் தவிர்க்க வேண்டும்." என்று கூறினார்.

டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்

மேலும், முந்தைய காலங்களில் ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விதித்த அபராதங்கள் குறித்து பேசுகையில், "அவை விமான தாமதங்கள் மற்றும் பிற சேவைகள் தொடர்பானவையே தவிர, விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியது அல்ல.

பாதுகாப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) எங்கள் விமானங்களை பறக்க அனுமதிக்காது." என்று சந்திரசேகரன் விளக்கினார்.

Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலைய... மேலும் பார்க்க

Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர... மேலும் பார்க்க

Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்... மேலும் பார்க்க

திருப்பூர்: இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகர்ப் பகுதியில் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பா... மேலும் பார்க்க

MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி... மேலும் பார்க்க

Kantara Chapter 1: "மழை, காற்று, பயம்..." - நீந்திப் பிழைத்த படக்குழு; அனுமதியில்லாமல் படப்பிடிப்பா?

கன்னட படமான காந்தாரா: சேப்டர்1 படப்பிடிப்பின்போது தொடர்ந்து புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இப்படப்பிடிப்பின் போது கடந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் பல... மேலும் பார்க்க