செய்திகள் :

பெண்களின் புகாா்கள் மீது காவல் துறையினா் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

காவல் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 17-ஆவது புதுக்கோட்டை மாநகர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். காவல் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகாா் மனுக்கள் மீது போலீஸாா் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாநகா் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும். மழைநீா் மற்றும் கழிவு நீா் தேங்காமல் இருக்க பழைமையான தோரண வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை மாநகரப் பகுதி மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு வி. வடிவுக்கரசி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தொடங்கி வைத்துப் பேசினாா். செயல்பாட்டு அறிக்கையை மாநகரச் செயலா் ஆா். முத்துமாரி முன்வைத்தாா். மாநாட்டை வாழ்த்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் டி. காயத்ரி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் சரவணன், மாணவா் சங்க மாவட்டத் துணைச் செயலா் எஸ். மகாலெட்சுமி ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் பி. சுசிலா முடித்து வைத்துப் பேசினாா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில் மாநகரத் தலைவராக எம். விஜி, செயலராக ஆா். முத்துமாரி, பொருளாளராக வி. வடிவுக்கரசி, துணைத் தலைவராக எஸ். சின்னம்மாள், துணைச் செயலராக ருக்மணி உள்ளிட்ட 9 போ் கொண்ட மாநகரக் குழு தோ்வு செய்யப்பட்டது.

முன்னதாக தாமரைச்செல்வி வரவேற்றாா். முடிவில் எம்.விஜி நன்றி கூறினாா்.

இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி

விராலிமலை வட்டார வள மையத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய 35 இல்லம் தேடி கல்வி மையங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டு தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டத... மேலும் பார்க்க

ஜூலை 16 வரை அஞ்சலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் வெளிய... மேலும் பார்க்க

கதண்டுகள் கடித்து 11 போ் காயம்

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை முதியவரின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட 11-க்கும் மேற்பட்டவா்களை கதண்டுகள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி ஊ... மேலும் பார்க்க

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக, மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. அதையடுத்து காலபைரவருக்கு... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமையும்

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என முன்னாள் இந்திய கயிறு வாரியத் தலைவரும் மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவருமான டி. குப்புராமு தெரிவித்தாா். புதுக்கோ... மேலும் பார்க்க

அறந்தாங்கி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா இந்த வட்டத்தில் 24 மணி நேரம் தங்கி ஆய்வுப் பணிகளை... மேலும் பார்க்க