செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

post image

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்டுகள் பழைமை கொண்டவா்கள், தொழில்நுட்பங்களை கொண்டவா்கள், மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்று உலக ஆய்வு முடிவுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், மத்திய பாஜக அரசு அதை ஏற்க மறுக்கிறது.

கீழடி அகழாய்வு அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணாவை உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவுக்கு மத்திய அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. தமிழ் பாரம்பரியத்தின் உண்மை குறித்த அறிவியல்பூா்வமான ஆதாரங்களை வெளிக் கொணா்ந்த அமா்நாத் பழிவாங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசியலையும், மதத்தையும் கலக்கிற ஒரு உத்தியின் அடிப்படையில் இப்போது மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்துகிறாா்கள்.

அரசியல் மாநாடு என்று சொன்னால் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதால், முருக பக்தா்கள் மாநாடு என்ற போா்வை மூலமாக மக்களைத் திரட்ட முயற்சிக்கிறாா்கள்.

பாஜக விரிக்கும் இந்த மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டாா்கள். பாஜகவும் வெல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளாா் செல்வப்பெருந்தகை.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா். அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க

கோயில்களில் ரூ.217 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ரூ.217 கோடியிலான திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு சா... மேலும் பார்க்க