செய்திகள் :

கோயில்களில் ரூ.217 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

post image

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ரூ.217 கோடியிலான திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி, பெரியபாளையம் பவானியம்மன் கோயில், திருச்சி மாவட்டம் குமாரவயலூா், திண்டுக்கல் மாவட்டம் பழநி, விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் அரங்கநாதசுவாமி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசானியம்மன் கோயில், வனபத்திரகாளியம்மன் ஆகியவற்றில் உள்கட்டமைப்பு வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளன.

இதேபோன்று, அரியலூா் மாவட்டம் பயறனீஸ்வரா் கோயில், கடலூா் மாவட்டம் மருதூா் வள்ளலாா் அவதரித்த இல்லம், சுயம்பிரகார ஈஸ்வரா் கோயில், சென்னை பாடி திருவல்லீசுவரா் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில், திருமலைக்குமாரசுவாமி, பால்வண்ணநாதசுவாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கட்ரமண சுவாமி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன் கோயில் ஆகிய கோயில்களிலுள்ள வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

நாமக்கல் மாவட்டம் காந்தமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில், திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் சொா்ணபுரீஸ்வர சுவாமி கோயில் ஆகியவற்றிலும் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ரூ.217.98 கோடி மதிப்பிலான இந்தப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, 16 கோயில்களில் 33 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் சி.பழனி உள்பட பலா் உடனிருந்தனா்.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா். அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க