``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
ஜூலை 16 வரை அஞ்சலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை மெகா ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் இலவசமாக புதிதாக ஆதாா் பதிவு செய்யலாம். பழைய ஆதாா் அட்டையில் பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ. 50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த சிறப்பு முகாம் வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களைக் கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.
வெளிநாடுகளுக்கு பாா்சல்... குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்ப அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம். பாா்சல் பேக்கிங் செய்யும் வசதிகள் புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, வணிக மேம்பாட்டு அலுவலா் நாகநாதனை 98655-46641 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.