கேதர்நாத் பெருவெள்ளம்: 12 ஆண்டுகள் ஆகியும் 702 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!
கதண்டுகள் கடித்து 11 போ் காயம்
கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை முதியவரின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட 11-க்கும் மேற்பட்டவா்களை கதண்டுகள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி ஊராட்சி, கொத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் ராமசாமி (80). இவா் வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவரது இறுதி ஊா்வலத்தில் மயானம் அருகே ஆலமரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள், கொள்ளி சட்டி புகையினால்
ஊா்வலத்தில் சென்றவா்களை கடித்தது. இதில், 11-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.