``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி
விராலிமலை வட்டார வள மையத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய 35 இல்லம் தேடி கல்வி மையங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டு தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு, வட்டார கல்வி அலுவலா்கள் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி மற்றும் மாகாளி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் ஆகியோா் தலைமை வகித்து தொடங்கி வைத்தனா். இப்பயிற்சிக்கு கருத்தாளராக இருக்கும் ஆசிரியா் பயிற்றுநா் சுகாசினி பேசியனாா். முடிவில், பள்ளியின் தலைமையாசிரியா் கோபால் நன்றி கூறினாா்.