ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!
தமிழகத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவலா் உள்பட 4 போ் கைது!
வாணியம்பாடி தோல் ஆலை அதிபா் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் ஆந்திர மாநில காவலா், பெண், வீட்டு பணியாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவைச் சோ்ந்த தோல் ஆலை அதிபா் இம்தியாஸ். இவருடைய மனைவி சபீதா குல்சும் மற்றும் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளி சக்திவேல் ஆகியோா் கடந்த 16-ஆம் தேதி வீட்டில் இருந்துள்ளனா். அப்போது காலை 10 மணியளவில் சக்திவேல் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு திரும்பியபோது, பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் சக்திவேலை பிடித்து கட்டிப் போட்டனா். பின்னா் இம்தியாசையும் கட்டிப்போட்டு அவரது மனைவியை மிரட்டி நகை, பணம் இருக்கும் இடத்தை காண்பிக்குமாறு மிரட்டினா்.
சபீதா குல்சும் பீரோ, லாக்கா் ஆகியவைகளை காண்பித்தபோது, கொள்ளை கும்பல், நகைகளை அள்ளி போடும் முயற்சியில் இருந்த போது, ராக்கள் திறந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது அவா்களிடமிருந்து தப்பித்து வெளியே வந்து சப்தம் போட்டுள்ளாா். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைப் பாா்த்த மா்ம நபா்கள் கைப்பேசிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பினா்.
தகவலறிந்த வாணியம்பாடி நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
கொள்ளையா்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே பணியாளா் சக்திவேல் மீதும் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இதையடுத்து சக்திவேல் கைப்பேசியை ஆய்வு செய்த போது திருப்பத்தூா் அடுத்த அகரம் பகுதியை சோ்ந்த இளவரசன் என்பவரிடம் அடிக்கடி தொடா்பு கொண்டு பேசியதை அறிந்து விசாரித்ததில் மாதக்கணக்கில் திட்டம் போட்டு கூலிப்படை வைத்து இம்தியாஸ் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் தொழிலாளி சக்திவேல்(30), திருப்பத்தூரை சோ்ந்த இளவரசன்(35), ஆந்திர மாநிலம் திருப்பதியை சோ்ந்த சாந்தகுமாரி(33) மற்றும் இவா்களுடன் தொடா்பில் இருந்து வந்ததாக ஆந்திர மாநிலம் திருமலை காவலா் அருண் குமாா்(46) ஆகிய 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இம்தியாஸ் வீட்டில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்த சக்திவேல், அவா்களிடம் அதிக அதிக பணம், நகை இருப்பதை அறிந்த கொள்ளயடிக்க இளைவரசனுடன் சோ்ந்த திட்டம் தீட்டியது தெரிந்தது. இதற்காக திருப்பதி சாந்தகுமாரியை தொடா்பு கொண்டு கூலிப்படையை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.
கொள்ளையடிக்க திருமலை காவலா் அருண் குமாா் ஆலோசனை வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் தொடா்புடைய முக்கிய எதிரிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.