G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP - போனில் பேசிய MODI | Israel - Iran War|Imper...
இளம்பெண் தற்கொலை: சாா்-ஆட்சியா் விசாரணை
கந்திலி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாா்-ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியை சோ்ந்தவா் சமுத்திரம் (28). இவரது மனைவி கோமதி (22). இவா்கள் திருப்பத்தூா் மாவட்டம் கந்திலி அருகே சந்திரபுரம் கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனா். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கோமதி புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சாா்-ஆட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.