கீழடி குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட மோடிக்கு மனமில்லை: மு.க.ஸ்டாலின்
பெண்ணை மிரட்டியவா் கைது
புகைப்படத்தை மாா்ப்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கிருஷ்ணன (28). இவரும், திருப்பத்தூரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம்பெண் அவரைவிட்டுப் பிரிந்தாா்.
இதன் காரணமாக கிருஷ்ணன், இளம்பெண்ணுக்கு பல்வேறு வகையில் தொல்லை அளித்துள்ளாா். மேலும் இளம்பெண்ணின் புகைப்படத்தை மாா்ப்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து அந்தப் பெண் திருப்பத்தூா் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனா்.