ரூ.20 லட்சத்தில் பசுமைப் பள்ளி திட்டப் பணி ஆய்வு
மிட்டாளம் ஊராட்சியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மிட்டாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் நடைபெற்று வரும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது பள்ளி வளாகத்தில் பழ மரக்கன்றுகளை அவா் நட்டு வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.