செய்திகள் :

`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

post image

மீண்டும் மீண்டும் இந்தியா மறுத்தும், 'நான் தான் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தேன்' என்று கூறி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

நேற்று நடந்த இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் போன்காலில், 'அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை. இந்தியா இதுவரை எந்த மத்தியஸ்தையும் ஏற்றதில்லை... இனியும் ஏற்காது' என்று தெரிவித்தப் பின்னும், ட்ரம்ப், 'நான் தான்' மத்தியஸ்தம் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த இத்தனைக்கும் பின்னால் இருப்பது, ட்ரம்பின் 'நோபல் பரிசு ஆசையோ' என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அசிம் முனீர்
அசிம் முனீர்

அசிம் முனீரின் அமெரிக்கப் பயணம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15), அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அங்கே அவர் பேசும்போது, 'இந்தியா - பாகிஸ்தான் இடையே ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததால் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

இதில் திளைத்துப்போய், நேற்று வெள்ளை மாளிகையில் அசிம் முனீருக்கு விருந்து கொடுத்துள்ளார் ட்ரம்ப்.

அசிம் முனீர் பயணத் திட்டத்தில் முன்பு ட்ரம்ப் சந்திப்பு சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவரது நோபல் பரிசு பரிந்துரைக்கு பிறகு, ட்ரம்ப் அவருக்கு விருந்தே கொடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகை சொல்வது என்ன?

இதை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியே உறுதிபடுத்தி இருக்கிறார். அவர் ட்ரம்ப் - அசிம் முனீரின் சந்திப்பிற்கு முன் அன்னா கெல்லி கூறியிருப்பதாவது,

ட்ரம்ப்
ட்ரம்ப்

"இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்க இருந்து அணு ஆயுதத் தாக்குதலை தடுத்ததற்கு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்கிற முனீரின் பரிந்துரையை அடுத்து முனீரை அதிபர் ட்ரம்ப் சந்திப்பார்".

ஆக, அசிம் முனீர் சொன்ன ஒரு வார்த்தை அவருக்கு, 'ட்ரம்ப் சந்திப்பு' என்னும் ஜாக்பாட்டை பெற்று தந்துள்ளது. மேலும், இதன் மூலம் ட்ரம்புக்கு நோபல் பரிசு ஆசை உள்ளது என்பதும் உறுதியாகி உள்ளது. .

'ட்ரம்புக்குஅமைதிக்கான நோபல் பரிசு!' - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்க மக்களே!

மகாராஷ்டிரா: ``5-ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்; இந்தி படிப்பது..'' - பட்னாவிஸ் சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று மாநில அரசு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களுக்கு இது க... மேலும் பார்க்க

Oarfish: வலையில் சிக்கிய துடுப்பு மீன்; பேரழிவுக்கான அறிகுறியா? - ஆராய்ச்சியாளர் பதில் |Explained

துடுப்பு மீன் - இந்த மீன் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கரை ஒதுங்குகின்றன.,. வலையில் சிக்குகின்றன. 'இதில் என்ன பிரமாதம்?' என்பது தானே உங்களது கேள்வி. இந்த மீன் கரை ஒதுங்கினால் உலகில் ஏதேனும் அசம்பா... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புதின்; ட்ரம்ப் கேட்ட உதவி - அமெரிக்கா, ரஷ்யா முரண்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடங்கி ஆறு நாள்கள் ஆகிறது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் விட்டுக்க... மேலும் பார்க்க

Iran - Israel: ``நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 7-வது நாளை அடைந்திருக்கிறது. ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி, நேற்று ஒரு தொலைக்காட்சிய... மேலும் பார்க்க

``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - மீண்டும் ட்ரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தா... மேலும் பார்க்க

``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்சி சிவா

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி மாநிலச்செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் தி... மேலும் பார்க்க