செய்திகள் :

மகாராஷ்டிரா: ``5-ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்; இந்தி படிப்பது..'' - பட்னாவிஸ் சொல்வதென்ன?

post image

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று மாநில அரசு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் மாநில அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்தி விருப்ப பாடம் மட்டுமே என்றும், கட்டாய பாடம் கிடையாது என்றும் மாநில அரசு விளக்கம் அளித்தது.

தேவேந்திர பட்னாவிஸ்

மாநில அரசு தற்போது புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. இதன் படி மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்தி மட்டுமல்லாது எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழியை தேர்வு செய்தால் மட்டுமே அதற்கு ஆசிரியர்கள் ஒதுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது மும்மொழி திட்டம் கட்டாயம் என்றும், அதேசமயம் மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாயம் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவு மறைமுகமாக இந்தியை கட்டாயமாக்குவதாக இருக்கிறது என்றும், இதில் மாணவர்களை நிர்ப்பந்தம் செய்வதாக இருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிப்பாடங்களை கற்றுக்கொடுப்பது தேவையற்றது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தேவேந்திர பட்னாவிஸ்

நாட்டிலேயே மகாராஷ்டிரா மட்டும்தான் மும்மொழி கொள்கையை அறிமுகம் செய்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், புதிய தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில்தான் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மும்மொழி கொள்கை குறித்து அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், "குழந்தைகள் 2 முதல் 8 வயதிற்குள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். இந்தியை குழந்தைகள் சிறு வயதில் இருந்தே பேசுவதால் அவர்கள் இந்தியை கற்றுக்கொள்வதில் எந்த வித சிக்கலும் இருக்காது. அதோடு இந்தி ஆசிரியர்களும் பள்ளிகளில் தேவையான அளவு இருக்கின்றனர். எனவே புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை" என்று நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்கிறது. எனவே மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் இருந்து மூன்று மொழியை கற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Oarfish: வலையில் சிக்கிய துடுப்பு மீன்; பேரழிவுக்கான அறிகுறியா? - ஆராய்ச்சியாளர் பதில் |Explained

துடுப்பு மீன் - இந்த மீன் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கரை ஒதுங்குகின்றன.,. வலையில் சிக்குகின்றன. 'இதில் என்ன பிரமாதம்?' என்பது தானே உங்களது கேள்வி. இந்த மீன் கரை ஒதுங்கினால் உலகில் ஏதேனும் அசம்பா... மேலும் பார்க்க

`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

மீண்டும் மீண்டும் இந்தியா மறுத்தும், 'நான் தான் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்து வைத்தேன்' என்று கூறி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று நடந்த இந்திய பிரதமர் மோடி ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புதின்; ட்ரம்ப் கேட்ட உதவி - அமெரிக்கா, ரஷ்யா முரண்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடங்கி ஆறு நாள்கள் ஆகிறது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலும் விட்டுக்க... மேலும் பார்க்க

Iran - Israel: ``நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி இன்றுடன் 7-வது நாளை அடைந்திருக்கிறது. ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி, நேற்று ஒரு தொலைக்காட்சிய... மேலும் பார்க்க

``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - மீண்டும் ட்ரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தா... மேலும் பார்க்க

``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்சி சிவா

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி மாநிலச்செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் தி... மேலும் பார்க்க