செய்திகள் :

"கைலாசா எங்கு உள்ளது? எப்படிச் செல்வது?" - நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி

post image

"கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என நித்யானந்தா வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நித்யானந்தா
நித்யானந்தா

திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தைச் சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர், "நான் பக்தராக மதுரை ஆதினம் மடத்திற்குள் நுழையத் தடைவிதிக்கக் கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனப் பல ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "மனுதாரர் எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என்று நித்யானந்த தரப்பினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

அப்போது நித்யானந்தா சீடர் அரச்சனா என்பவர், "ஆஸ்திரேலியா அருகில் உள்ள யூ.எஸ்.கே என்ற தனி நாட்டில் உள்ளார். அந்த நாட்டிற்கு ஐ.நா., அங்கீகாரம் உள்ளது" என்றவர், தங்கள் தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து, வழக்கறிஞரை மாற்றுவதற்கு அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு; `திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது' - சீமான்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்... மேலும் பார்க்க

48 நாளில் வேண்டியவை நிறைவேறும்; தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! - நிகும்பலா ஹோமம்

24-6-2025 அமாவாசை இரவில் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா ஹோமம் நடத்தவுள்ளது. இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! 48 நாளில் வே... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: கோபுர புதுப்பிப்பு தொடக்கம்; 14 ஆண்டுகளாகச் சேதமாகாத கலச தானியம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில... மேலும் பார்க்க

`துக்கமும் அச்சமும் தீர்ந்து அதிர்ஷ்டசாலியாக வேண்டுமா’ 48 நாளில் நடைபெறும் அதிசயம்! நிகும்பலா ஹோமம்!

கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் உடனுறை பத்ரகாளி கோயிலில் 64 கோடி யோகினிகள் கூடி தேவியை வழிபட்டார்கள் என இந்த ஆலய தலவரலாறு கூறுகிறது. 24-6-2025 தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா... மேலும் பார்க்க

``பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்'' - பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உருக்கம்

காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் 'பெரியவா என்னும் பேரமுதம... மேலும் பார்க்க