செய்திகள் :

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: கோபுர புதுப்பிப்பு தொடக்கம்; 14 ஆண்டுகளாகச் சேதமாகாத கலச தானியம்!

post image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

இக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் வரும் ஜூலை 7-ம் தேதி 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.  

9 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள கோபுரக் கலசங்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

கோபுரக்கலசத்தில் வரகு தானியம்
கோபுரக்கலசத்தில் வரகு தானியம்

90 சதவீத பணிகள் இந்தப் பெருந்திட்ட வளாகப் பணிகளில் நிறைவு பெற்றுள்ளன. மற்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை, நடராஜர் என 6 சன்னதிகளில் உள்ள கோபுர விமான கலசங்கள் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக கோயிலின் மேல் உள்ள கோபுரத்தில் கலசங்கள் அனைத்தும் கழற்றப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டன.

கோபுரத்தின் மேலே இருந்த கலசங்களைக் கழற்றியபோது 14 வருடங்களுக்கு முன்பு இந்தக் கலசங்களில் வைத்த நவதானியங்களில் ஒன்றான வரகு எந்தவித சேதமும் அடையாமலும், கெட்டுப்போகாமலும் இருந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கலசங்களில் இருந்த வரகை மொத்தமாகச் சேகரித்து தனியாக எடுத்துப் பத்திரப்படுத்தினர்.

பிரிக்கப்பட்ட விமான கோபுர கலசம்
பிரிக்கப்பட்ட விமான கோபுர கலசம்

மேலும் நடராஜர் கலசத்தில் மயில் இறகும், ஆமணக்கும், மூலவர் மற்றும் தெய்வானை கலசத்தில் செப்பு தகடும் இருந்தது. முதலில் தனித்தனியாகக் கழற்றப்பட்ட கலசங்களுக்கு பாலீஸ் போடப்பட்டன.

அதைத் தொடர்ந்து அந்தக் கலசங்களின் ஒவ்வொரு பகுதியிலும் பாதரசம் பூசப்பட்டன. அதன்பிறகு கலசங்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தங்க முலாமை அந்தக் கலசங்கள் மேல் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`துக்கமும் அச்சமும் தீர்ந்து அதிர்ஷ்டசாலியாக வேண்டுமா’ 48 நாளில் நடைபெறும் அதிசயம்! நிகும்பலா ஹோமம்!

கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் உடனுறை பத்ரகாளி கோயிலில் 64 கோடி யோகினிகள் கூடி தேவியை வழிபட்டார்கள் என இந்த ஆலய தலவரலாறு கூறுகிறது. 24-6-2025 தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா... மேலும் பார்க்க

``பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்'' - பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உருக்கம்

காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் 'பெரியவா என்னும் பேரமுதம... மேலும் பார்க்க

உங்களின் எந்த பிரச்னையையும் 48 நாளில் தீர்க்கும் நிகும்பலா ஹோமம் - உடனே சங்கல்பம் செய்யுங்கள்!

உங்களின் எந்த பிரச்னையையும் 48 நாளில் தீர்க்கும் நிகும்பலா ஹோமம்! உடனே சங்கல்பம் செய்யுங்கள்! ஆனி அமாவாசை நாளில் (24-6-2025) சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா ஹோமம... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்; 275 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகா கும்பாபிஷேகம்..!

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தை தலைமையகமாகக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் செயல்... மேலும் பார்க்க

'இதுதான் விதியா...' - விமான கோளாறால் இளைஞருக்கு சாதகமான 'ஹஜ்' பயணம்!

புனித நகரமான மெக்காவுக்கு வழக்கம்போல பயணம் செய்த லிபியாவைச் சேர்ந்த யாத்ரீகருக்கு ஏற்பட்ட தடைகள், அவற்றைத் தாண்டிய அவரது விடாப்பிடியான உறுதியும் நம்பிக்கையும் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.... மேலும் பார்க்க