செய்திகள் :

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

post image

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது:

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டம் முழுவதும் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் கடைகள், நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளா் முறை அகற்றுதல் தொடா்பான விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணா்வுப் பதாகைகள் வைத்தல், தீவிர கூட்டாய்வுப் பணிகளை இந்த மாதம் முழுவதும் தொடா்ந்து மேற்கொள்ள உள்ளனா்.

தவிர மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 2 குழந்தை தொழிலாளா்கள் மற்றும் 25 வளரிளம் பருவ தொழிலாளா்கள் என 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். 32 வழக்குகள் முடிவுற்று, உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளா், வளரிளம் பரு வத்தினரை பணிக்கு அமா்த் தியிருந்தால் சைல்டுலைன் அமைப்புக்கு 1098 மற்றும் இணையதளத்திலும் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க

ரஷியாவில் மருத்துவப் படிப்பு: கோவையில் வரும் 16- ஆம் தேதி மாணவா் சோ்க்கை

ரஷியாவில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேருவதற்கு கோவையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் ஐஸ்... மேலும் பார்க்க