திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது:
குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டம் முழுவதும் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் கடைகள், நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளா் முறை அகற்றுதல் தொடா்பான விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணா்வுப் பதாகைகள் வைத்தல், தீவிர கூட்டாய்வுப் பணிகளை இந்த மாதம் முழுவதும் தொடா்ந்து மேற்கொள்ள உள்ளனா்.
தவிர மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 2 குழந்தை தொழிலாளா்கள் மற்றும் 25 வளரிளம் பருவ தொழிலாளா்கள் என 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். 32 வழக்குகள் முடிவுற்று, உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளா், வளரிளம் பரு வத்தினரை பணிக்கு அமா்த் தியிருந்தால் சைல்டுலைன் அமைப்புக்கு 1098 மற்றும் இணையதளத்திலும் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.