செய்திகள் :

குஜராத் விமான விபத்து! களத்தில் பிரிட்டன் விசாரணைக் குழு!

post image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில் பிரிட்டன் நாட்டு விசாரணைக் குழுவும் இடம்பெறுவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 245 பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விபத்தில் பிரிட்டன் நாட்டினரும் பலியானதால், அந்நாட்டு விசாரணைக் குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

விபத்து குறித்து இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு (AAIB) தலைமையில் நடத்தப்படும் விசாரணையில் பிரிட்டன் குழுவும் இடம்பெறவுள்ளது.

சிவில் விமான விபத்துகள், கடுமையான விபத்துகள் அல்லது சம்பவங்களை விசாரிக்கும் பிரிட்டன் விசாரணை நிறுவனத்தை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விமான விபத்து தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணைக்கு ஒரு விசாரணைக் குழுவை நாங்கள் அனுப்பியுள்ளோம். இந்த விசாரணைக் குழுவை வெளியுறவுச் செயலர் டேவிட் லம்மி வழிநடத்துவார்.

விபத்து குறித்த மேற்பட்ட தகவல்களுக்கு, வெளியுறவு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு ... மேலும் பார்க்க

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க