அரியலூா் மாவட்டத்தில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள்!
அரியலூா் மாவட்டம், தழுதாழைமேடு, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா், குண்டவெளி, தா.பழூா் ஆகிய ஊராட்சிகளில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: ஜூன் 18-ஆம் தேதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், தழுதாழைமேடு கிருஷ்ணா மஹாலிலும், இளையபெருமாள் ஊராட்சி மன்றம் அருகிலும், குருவாலப்பா் கோயில் மீரா திருமண மஹாலிலும், குண்டவெளி கட்டடக் குழு திருமண மஹாலிலும், தா.பழூா் பிஓபி மஹாலிலும் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறுகிறது.
இம்முகாம்களில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனா். மேலும் இம்முகாமில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு தங்களது துறை சாா்ந்த சேவைகளை வழங்கவுள்ளனா்.
எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மக்களுடன் முதல்வா் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 30 நாள்களில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.