செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: Boeing 787 குறித்து குற்றம்சாட்டிய அமெரிக்க செனட்டர்... வைரலாகும் வீடியோ!

post image

"பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள். இப்படி செய்து... பாராட்டு பெற்று அதிக சம்பள உயர்வை பெறுகிறீர்கள்".

- இது கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் கால்ஹவுன் மீது அமெரிக்க செனட்டர் ஜோஷ் ஹவ்லி வைத்த குற்றச்சாட்டு.

கால்ஹவுனின் பதவிக்காலத்தில், போயிங் நிறுவனத்தின் விமானங்கள் பல விபத்துகள் மற்றும் பாதுகாப்பு குளறுபடிகளை சந்தித்துள்ளது. இருந்தாலும், அவரது சம்பளம் 2022-ம் ஆண்டை விட, 45 சதவிகிதம் 2023-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டு, இவரது சம்பளம் 22.6 மில்லியன் டாலர்கள். அடுத்த ஆண்டு (2023), இவரது சம்பளம் 32.8 மில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி தான் கால்ஹவுனை கடுமையாக சாடியிருந்தார் ஹவ்லி. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வைரலாக காரணம் என்ன?

மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் ஹவ்லி குறிப்பிட்ட பாதுகாப்பு குளறுபடிகள் 787 ரக விமானத்தை தான். கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12), அகமதாபாத்தில் விபத்து ஏற்பட்ட விமானமும் 787 ரகம் தான். அதனால் தான், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பின்னணி!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்திடம் இருந்து பல நாடுகள் விமானங்களை வாங்கி வருகிறது. 'சீக்கிரம் டெலிவரி தர வேண்டும்' என்று பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்றாமல் விமானங்கள் விற்கப்படுகிறது என்பது தான் குற்றச்சாட்டின் முக்கிய பின்னணி.

போயிங் 787
போயிங் 787

மேலும், விமான நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இருக்கும் ஊழியர்களுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது என்று அந்த நிறுவனத்தின் ஊழியர்களே முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.

புதிய தலைமை நிர்வாக அதிகாரி கூறுவது என்ன?

போயிங் விமானத்தின் பாதுகாப்பு குளறுபடி வழக்கு ஒன்றில், கடந்த ஏப்ரல் மாதம் போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் ஆஜரானார்.

அப்போது அவர், "நாங்கள் எங்களது ஊழியர்களை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. பாதுகாப்பு முக்கியம் என்று அழுத்தம் கொடுக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

அகமதாபாத் விபத்திற்கு காரணம் என்ன?

வைரல் வீடியோ, மேலே கூறிய சம்பவங்கள் வைத்து பார்க்கும்போது, அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்திற்கு, 'பாதுகாப்பு குளறுபடிகள் காரணமா?' என்ற கேள்வி எழலாம்.

ஆனால், விபத்தின் காரணம் குறித்து இன்னமும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்... மேலும் பார்க்க

புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 - 15 பேர் வெள்ளத்தில் அட... மேலும் பார்க்க

துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துறையின் துரிதம்!

துபாயில் இருக்கும் 67 மாடி குடியிருப்பு 'மெரினா பினாக்கில்'. இந்தக் குடியிருப்பிற்கு 'டைகர் டவர்' என்று இன்னொரு பெயரும் உண்டு. 767 அப்பார்ட்மென்டுகள் இருக்கும் இந்தக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 ப... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது.உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்க... மேலும் பார்க்க

Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க