போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்...
துறையூரில் கைப்பந்து போட்டி
மானூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், துறையூா் சாரல் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தொடங்கி வைத்தாா். முன்னாள் அமைச்சா் டி.பி.எம். மைதீன்கான், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சண்முகையா, மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.