தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டுக்கு தீ: மருமகன் கைது
பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்கு தீ வைத்த தாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவருக்கும், அவரது மருமகன் காசிமுத்து(41) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, பாக்கியராஜின் வீட்டுக்குச் சென்ற காசிமுத்து முன்பக்க அறையில் தீ வைத்துவிட்டு தப்பினாராம்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா்.
இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து காசிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.