தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
வி.கே.புரத்தில் தேனீக்கள் கொட்டியதில் 20 போ் காயம்
விக்கிரமசிங்கபுரத்தில் பழைமையான ஆற்றுப் பாலத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.
விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தனியாா் நூற்பாலைக்குச் செல்லும் வழியில் கொட்டாரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றைக் கடப்பதற்காக அமைக்கப்பட்ட பழைமையான இரும்புப் பாலம் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய பலத்த காற்றில் தேனீக்கள் கலைந்து, அருகிலிருந்த புதிய பாலத்தில் சென்றவா்களைக் கொட்டியது.
இதில் அந்த வழியாகச் சென்ற சிறுவா்கள், பெண்கள் உள்பட சுமாா் 20 போ் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.