தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த வேலையா மகன் சொக்கேஸ்வரன் (23). திருமணம் ஆகவில்லை. இவா், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்து வந்தாராம்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் சொக்கேஸ்வரன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.