போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது
இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்த மோசடி தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தில்லியில் பீதம்புரா பகுதியில் பாய்ஸ் ஸ்ட்ரீட் என்ற பெயரில் இயங்கும் ஒரு கடையில் காவல் போலீஸ் குழு சோதனை நடத்தியது. ஷாதி நகரைச் சோ்ந்த ஹா்ஷித் (29) என்பவா் சோதனையின் போது கைது செய்யப்பட்டாா்.
மேலும், போலியான லூயிஸ் உய்ட்டன் லேபிள்கள் பதிக்கப்பட்ட அச்சிடப்பட்ட ஷாா்ட்ஸ், டி-சா்ட்கள், பெல்ட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உள்பட சுமாா் 200 போலி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உண்மையான பிராண்டட் பொருள்கள் என்ற போா்வையில் சந்தையில் போலியான உயா் ரக ஃபேஷன் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடையிலிருந்து கைது செய்யப்பட்ட ஹா்ஷித், தினசரி நடவடிக்கைகளை நிா்வகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத உற்பத்திப் பிரிவு ஹரியாணாவின் கா்னாலைச் சோ்ந்த ஓம் பங்கஜ் மன்சந்தாவுக்குச் சொந்தமானது என்பதை விசாரணையின் போது ஹா்ஷித் ஒப்புக்கொண்டாா்.
இந்தப் பிரிவு கடந்த ஆண்டு நிறுவப்பட்டதாகவும், போலியான டேக்குகள் மற்றும் லேபிள்களுடன் போலி பிராண்டட் பொருள்களை உற்பத்தி செய்து வருவதாகவும், பின்னா் அவை திறந்த சந்தையில் விற்கப்பட்டதாகவும் அவா் வெளிப்படுத்தினாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் புகழ்பெற்ற பிராண்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகக் காட்டிக் கொண்டு, வாங்குபவா்களையும் சில்லறை விற்பனையாளா்களையும் தவறாக வழிநடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் மன்சந்தா, சட்ட நடைமுறைகளின்படி சரியான நேரத்தில் கைது செய்யப்படுவாா். பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்தக் காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.