விஜய் ரூபானி உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!
தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்
தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது.
‘தேசியத் தலைநகரம் முழுவதும் தண்ணீா் பற்றாக்குறை உள்ளது. தியோலி, அம்பேத்கா் நகா், மாடல் டவுன், ஹரி நகா் ஆகிய இடங்களிலும் தண்ணீா் பிரச்னை உள்ளது. மக்கள் இந்த நிலைமை குறித்து எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆனால், அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்று ஆம் ஆத்மியின் தில்லி மாநில ஒருங்கிணைப்பாளா் சௌரவ் பரத்வாஜ் ஒரு செய்தியாளா் கூட்டத்தில் தெரிவித்தாா்.
இந்தப் பிரச்னையை தீா்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பிய சௌரவ் பரத்வாஜ், ‘பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு உள்ளது. நான் கேட்க விரும்புவது அரசால் எத்தனை குழாய் கிணறுகள் நிறுவப்பட்டுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் நிதியைப் பயன்படுத்தி நிறுவிய குழாய் கிணறுகளைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், அரசால் நிறுவப்பட்ட குழாய் கிணறுகளைப் பற்றி நான் பேசுகிறேன்’ என்றாா்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ‘நான்கு எஞ்சின்’ என்ற வாா்த்தையை பாஜகவைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனா். இது மத்திய அரசு, தில்லி அரசு, எம்சிடி, துணை நிலை ஆளுநா் அலுவலகத்தைக் குறிக்கிறது.
‘நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, துணை நிலை ஆளுநரும் பாஜகவும் நீா் மேலாண்மையில் சிக்கல் இருப்பதாகக் கூறினா். அரசு நீா் மேலாண்மையை துணை நிலை ஆளுநரால் அடைய முடியவில்லையா?’ என்று அவா் கேட்டாா்.
இதேபோன்ற கருத்துகளை எதிரொலிக்கும் வகையில், முன்னாள் கட்சி எம்.எல்.ஏ அகிலேஷ் பதி திரிபாதி, நான்கு எஞ்சின் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறினாா். ஆம் ஆத்மி கட்சியின் கூற்றுகளுக்கு ஆளும் பாஜகவிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் இல்லை.