Rashmika: 'இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது'- ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?
தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகமதாபாத் விமான விபத்து குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கிறார்.

"விமான விபத்துக்கு பிறகு நான் நடுங்கிப் போனேன். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது. நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன, எதுவரை வாழ்க்கை செல்லும் என தெரியவில்லை.
எனவே கவனமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...