செய்திகள் :

Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்பாளர் மாயம்?

post image

அகமதாபாத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் 29 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலை இருக்கிறது. இதனால் டி.என்.ஏ சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த நாளில் இருந்து சினிமா தயாரிப்பாளர் மகேஷ் ஜிராவாலா காணாமல் போய் இருக்கிறார். கடைசியாக மகேஷ் போன் விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 700 மீட்டர் தூரத்திற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து பிற்பகல் 1.39 மணிக்கு நடந்துள்ளது. அதேசமயம் மகேஷ் போன் 1.40 மணிக்கு ஆப் ஆகி இருக்கிறது. எனவே விமான விபத்தில் தனது கணவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக மகேஷ் மனைவி ஹேதல் அச்சம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் விமான விபத்து நடந்த பி.ஜெ.மருத்துவமனையில் டி.என்.ஏ.மாதிரி கொடுத்துள்ளனர். இது குறித்து ஹேதல் கூறுகையில், ''கடைசியாக அவர் என்னிடம் 1.14 மணிக்கு போனில் பேசினார். வேலை முடிந்துவிட்டதாகவும், வீட்டிற்கு வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு போன் செய்து பார்த்தபோது போன் ஆப்பாகி இருந்தது.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளோம். அவரது ஸ்கூட்டர் மற்றும் போனையும் காணவில்லை. போன் சிக்னலை பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது. அவர் வழக்கமான வழியில் வராமல் ஒரு நாளும் வராத புது வழியில் பயணம் செய்துள்ளார். டி,என்.ஏ மாதிரி கொடுத்திருக்கிறோம்''என்று கவலையுடன் தெரிவித்தார்.

விபத்து நடந்து 4 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இது வரை 80 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 33 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முதன்மை செயலாளர் மிஸ்ரா விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அதோடு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி இறந்தவர்கள் உடல்களை விரைவாக உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க