செய்திகள் :

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

post image

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்பவர், உத்திரபிரதேசத்தின் ஹாபூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். நிஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

instagram

அதிகமான நேரம் இதற்கான செலவிட்டதையடுத்து, நிஷாவை இன்ஸ்டாகிராமில் செலவிடும் நேரத்தை குறைத்துவிட்டு வீட்டு பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துமாறு கணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பதிகளுக்கு இடையே வெடித்த பிரச்னை, காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.

அதாவது கணவரின் பேச்சைக் கேட்டு நிஷா சமூக வலைதளங்களின் பயன்பாட்டை சற்று குறைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

ஆனால் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இரண்டு பாலோவர்ஸ் குறைந்ததை கண்டு கோபமடைந்த அந்த பெண் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

”என் கணவர் என்னை பாத்திரங்கள் கழுவுவதிலும், வீடு சுத்தம் செய்வதிலும் அதிகம் கவனம் செலுத்த சொன்னதால் instagramல் பின் தொடர்பவர்கள் குறைந்துவிட்டனர், எனக்கு ரீல்ஸ் எடுப்பதற்கு நேரமே கிடைக்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

கணவன் - மனைவி பிரச்னை

இதற்கு நிஷாவின் கணவர், வீட்டு வேலைகளை புறக்கணித்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதாக எதிர்ப்பு புகாரும் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட தம்பதிகளுக்கு நான்கு மணி நேரம் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.

திருமணத்தின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் ஒரு வழக்கா? என்று யோசிக்கும் நேரத்தில் சமூக ஊடகங்கள் இன்று தனிப்பட்ட உறவுகளின் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க