சோ்ந்தமரம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
சோ்ந்தமரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 17 வயது சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சோ்ந்தமரம் அருகேயுள்ள சின்னத்தம்பிநாடாரூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த க.பொண்ணுக்கிளி (68), கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தொடா் விசாரணை நடத்தி வந்தனா். இதில், அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். சிறுவனை சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.