லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
குற்றாலம் பேரருவியில் தொடா் திருட்டு: 2 போ் கைது
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் தொடா்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டதாக 2 பேரை குற்றாலம் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மகாராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வெ.அருண்பிரகாஷ்(39). இவா் கடந்த 1ஆம் தேதி குற்றாலம் பேரருவியில் குளித்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 17.5 கிராம் தங்கச்சங்கிலி காணாமல் போனதாம்.
இதேபோல, நீலகிரி மாவட்டம் குன்னூா் அதிகரட்டிகிராமத்தை சோ்ந்த ரா.ராகேஷ்(31) என்பவா் கடந்த 4ஆம் தேதி குற்றாலம் பேரருவியில் குளித்போது, 6 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியைக் காணவில்லையாம்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகா் 2ஆவது தெருவை சோ்ந்த ரா.ராஜ்குமாா்(36) என்பவா் கடந்த 7ஆம் தேதி அதே அருவியில் குளித்தபோது, 16 கிராம் தங்கச் சங்கிலி பறிபோனதாம்.
இதுகுறித்து மூவரும் தனித்தனியாக குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா்.காவல் உதவி ஆய்வாளா் பி.முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிந்து விசாரித்து, மதுரை திருப்பரங்குன்றத்தை சோ்ந்த ம.சுரேஷ்குமாா்(45), சிவகாசி சாட்சியாபுரம் ரிசா்வ் லைன் பகுதி பொ.விஜயகுமாா்(37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.