செய்திகள் :

AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?

post image

ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்பரப் பொருளிலிருந்து அத்தியாவசியப் பொருளாக மாறி வருகிறது. கோடைக்காலத்தில் அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

தற்போது பயன்படுத்தப்படும் ஏசிகளில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 32 செல்சியஸ் வரை மாற்றி அமைக்கும் வசதிகள் உள்ளன.

இந்த அமைப்பில் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதலிலும் அதிகபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் மாற்று அமைக்க உள்ளதாக அமைச்சர் சமீபத்தில் பேசி இருக்கிறார்.

அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியதாவது, ”ஏர் கண்டிஷனிங் தரநிலைகள் தொடர்பாக , ஒரு புதிய ஏற்பாடு விரைவில் செயல்படுத்தப்படுகிறது.

ஏசிகளுக்கான வெப்பநிலை 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும், அதாவது 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாகவோ முடியாது.

வெப்பநிலை அமைப்புகளைத் தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையான சோதனை இது" என்று கட்டார் கூறியிருக்கிறார்.

”ஏசி பயன்பாட்டில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், மிகக் குறைந்த குளிரூட்டும் அமைப்புகள் காரணமாக அதிகப்படியான மின் பயன்பாட்டைக் குறைக்கவும், ஏசிகளின் குறைந்தபட்ச வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலையை 28 டிகிரி செல்சியஸாகவும் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம்" என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறார்.

வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசிக்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ஏற்பாடு குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, பலரும் இது குறித்து விமர்சித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவு செலவு செய்தார்?

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.டோக்கியோவில் ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

ஹாய், எப்படி இருக்கீங்க!நீங்க வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியரா? இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இந்தியாவுக்கு திரும்பி வந்துருவீங்களா?மீண்டும் உங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது, யார் கையையு... மேலும் பார்க்க

மருமகளிடம் கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார் - எங்கே நடந்தது இந்த கொடுமை?

பெண்ணிடம் வரதட்சணையாக அவரது கிட்னியை கேட்ட மாமியார் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.தீப்தி என்ற பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரில் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆகி சென்றுள்ளார். ஆரம்பத்தில் ... மேலும் பார்க்க

மாதம் ரூ.15,000 முதல் ரூ.1.26 லட்சம் வரை ; இந்தியா டு அமெரிக்கா... விந்தணு தானமும் வருமானமும்!

சமீபத்தில் ஒரு நபர் தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று சமூக ஊடகங்களில் கூறியதுடன் தனது வருமானம் குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை க... மேலும் பார்க்க

JEE Advanced தேர்வு எழுதிய ChatGPT 3.0 ; கடினமான தேர்வில் அதன் ஸ்கோர் என்ன தெரியுமா?

JEE Advanced தேர்வு - இதை நம்ம ChatGPT எழுதினால் எப்படி இருக்கும்? அப்படி என்ன ஜே.இ.இ தேர்வி ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் தேர்வு உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்று. இது இந்திய த... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா - அதிர்ச்சி வீடியோ!

செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப்... மேலும் பார்க்க