Medical Courses: 'மருத்துவப் படிப்புன்னா MBBS மட்டும் இல்ல...' - வேறு என்னென்ன ப...
AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?
ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்பரப் பொருளிலிருந்து அத்தியாவசியப் பொருளாக மாறி வருகிறது. கோடைக்காலத்தில் அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
தற்போது பயன்படுத்தப்படும் ஏசிகளில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 32 செல்சியஸ் வரை மாற்றி அமைக்கும் வசதிகள் உள்ளன.
இந்த அமைப்பில் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதலிலும் அதிகபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் மாற்று அமைக்க உள்ளதாக அமைச்சர் சமீபத்தில் பேசி இருக்கிறார்.
#WATCH | Delhi: Union Minister of Housing & Urban Affairs, Manohar Lal Khattar says, "Regarding air conditioning standards, a new provision is being implemented soon. The temperature standardization for ACs will be set between 20°C to 28°C, meaning we won't be able to cool below… pic.twitter.com/Iwnaa4ZPKN
— ANI (@ANI) June 10, 2025
அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியதாவது, ”ஏர் கண்டிஷனிங் தரநிலைகள் தொடர்பாக , ஒரு புதிய ஏற்பாடு விரைவில் செயல்படுத்தப்படுகிறது.
ஏசிகளுக்கான வெப்பநிலை 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும், அதாவது 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாகவோ முடியாது.
வெப்பநிலை அமைப்புகளைத் தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையான சோதனை இது" என்று கட்டார் கூறியிருக்கிறார்.
”ஏசி பயன்பாட்டில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், மிகக் குறைந்த குளிரூட்டும் அமைப்புகள் காரணமாக அதிகப்படியான மின் பயன்பாட்டைக் குறைக்கவும், ஏசிகளின் குறைந்தபட்ச வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலையை 28 டிகிரி செல்சியஸாகவும் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம்" என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறார்.
வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசிக்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஏற்பாடு குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, பலரும் இது குறித்து விமர்சித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.