செய்திகள் :

போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்

post image

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் அவர்களின் விவாகரத்து பெரிதும் பேசப்பட்டது.

இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. தொழிலதிபரான சஞ்சய் கபூர் போலோ விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் தேசிய அளவில் சிறந்த போலோ வீரராகவும் இருக்கிறார்.

அவர் லண்டனில் போலோ விளையாடுவதற்காக சென்றிருந்தார். அங்கு அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே போட்டியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து போட்டியில் இருந்து வெளியில் வந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்து போனார். சஞ்சய் கபூர் விளையாடிக்கொண்டிருந்த போது அவரது தொண்டையில் ஒரு தேனீ கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சய் கபூர் மரணத்திற்கு தொழில்துறையினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சஞ்சய் கபூர் சொந்தமான போலோ அணி ஒன்றை வைத்திருக்கிறார்.

அவர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்த பிறகு பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கரிஷ்மா கபூரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக பேஷன் டிசைனர் நந்திதா என்பவரை திருமணம் செய்தார். சஞ்சய் கபூருக்கு இந்தியா, சீனா, மெக்சிகோ, செர்பியா நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கிறது. அதோடு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க

Air India: `கடைசி உரையாடல்' - விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க

`மரத்தில் வந்த தண்ணீர்' - மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது. இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணிய... மேலும் பார்க்க

``லக்கேஜ் குறைக்க முடியாது..'' - விமான நிலையத்தில் தரையில் புரண்டு அழுத சீன பெண்.. என்ன நடந்தது?

இத்தாலி விமான நிலையத்தில் சீன பெண் ஒருவர் தரையில் புரண்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க் போஸ்ட் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அந்த பெண், ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: ``ட-வடிவ பாலம்; வாகனங்கள் எப்படி செல்லும்?'' - எதிர்க்கட்சிகள் காட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 2023-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்... மேலும் பார்க்க