செய்திகள் :

`மரத்தில் வந்த தண்ணீர்' - மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

post image

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது.

இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணியுள்ளனர். மரத்துக்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்கும் பூசி வணங்கியுள்ளனர்.

பின்னர் உள்ளூர் நிர்வாகம் வருவது அதிசய தண்ணீர் அல்ல என்றும், நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே தண்ணீர் வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

சஹாரா சொசைட்டி அருகில் உள்ள மெயின் ரோட்டில் இந்த மரம் இருந்துள்ளது. மரத்தைச் சூழ்ந்த மக்கள் கசிந்த நீரை, புனித தண்ணீராக நினைத்தது குடித்தது மட்டுமல்லாமல் அதற்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்திகள் இருந்ததாகவும் நம்பியுள்ளனர்.

எனினும் தண்ணீர் கசிவு பற்றிய செய்திகள் வந்ததுமே பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி (பிசிஎம்சி) அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த மரம், புனித தண்ணீர் பற்றிய வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாகியிருக்கின்றன.

இந்த சம்பவம் இந்திய மக்களிடையே மூட நம்பிக்கைகள் எந்த அளவு மலிந்து கிடக்கின்றன என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

மதுராவில் நடந்த சம்பவம்..

கடந்த ஆண்டு இதேபோல மதுராவின் பிரசித்திபெற்ற பாங்கே பிஹாரி கோவிலில் இருந்த யானை சிலையில் இருந்து கசிந்த நீரை மக்கள் தீர்த்தமாக எண்ணி பருகினர். மக்கள் அதை 'சரண் அமிர்தம்' என அழைத்தனர்.

பின்னர் அந்த கோவிலின் பூசாரி சிலையில் இருந்து கசியும் தண்ணீர் ஏசியில் இருந்து வெளியேறியது என்பதை விளக்கியுள்ளார்.

பூசாரி கூறியதையும் கண்டுகொள்ளாத மக்கள் தொடர்ந்து அந்த தண்ணீரைப் பிடித்து குடித்து மேலே தெளித்துக்கொண்டனர். இந்த சம்பவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க

Air India: `கடைசி உரையாடல்' - விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க

``லக்கேஜ் குறைக்க முடியாது..'' - விமான நிலையத்தில் தரையில் புரண்டு அழுத சீன பெண்.. என்ன நடந்தது?

இத்தாலி விமான நிலையத்தில் சீன பெண் ஒருவர் தரையில் புரண்டு அழுத வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க் போஸ்ட் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அந்த பெண், ... மேலும் பார்க்க

போலோ விளையாடியபோது மாரடைப்பு; நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் மரணம்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டு பின்னர் 2016-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். சஞ்சய் கபூர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இ... மேலும் பார்க்க