செய்திகள் :

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

post image

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின்றன கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?

பெர்லி என்ற நகரம் நெதர்லாந்துக்கும் பெல்ஜியமிற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த இருநாட்டுக்கு இடையேயான எல்லை, வெள்ளை கோடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் இருக்கும் பல ஹோட்டல்கள், வீடுகள் இந்த கோட்டில் உள்ளது. பாதி கஃபேகள் பெல்ஜியத்திலும் பாதி நெதர்லாதிலும் உள்ளது.

இந்த எல்லைக்கோட்டின் பெரும் பகுதிகள் வீடுகளிலும் தெருக்களிலும் உள்ளன. அதாவது எல்லைகள் பிரிக்கும் போது, வீடுகளும் கூட வெள்ளைக்கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் தூங்கும் மக்கள் பெல்ஜியத்தில் விழிக்கிறார்கள். அந்த வகையில் கோடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த எல்லை 450 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளது, 50 கிலோமீட்டருக்கும் அதிகமானவை பார்லே-நாசாவ் மற்றும் பார்லே-ஹெர்டாக் போன்ற நகரங்கள் வழியாக செல்கின்றன.

1830-ல் நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் தனி நாடாக பிரிந்தது. எந்த பிரிவினை என்பது எல்லைகளை பிரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பல வீடுகள், கடைகள், தெருக்கள் எல்லாம் இந்த எல்லைக்கோட்டிற்கு இடைப்பட்ட இடத்திலேயே வந்துவிட்டன. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற சிக்கலும் எழுந்தது.

அதற்கும் ஒரு முடிவு செய்யப்பட்டது. எல்லை கோடுகள் வரும் வீடுகளின் வாசல்கள் எங்கு உள்ளதோ, அவர்கள் அந்த நாட்டு குடிமக்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நகரில் எல்லாமே இரண்டாக இருக்கும் ஒரே நகருக்கு இரண்டு பெயர்கள், இரண்டு தபால் நிலையங்கள் என இரண்டாக இருக்கும். இந்த தனித்துவம் காரணமாக உலகம் முழுவதிலிருந்தும் இந்த இடம் பலரும் விரும்பக்கூடிய ஒரு சுற்றுலா தலமாக மாறிவிட்டது.

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க