தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை
சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு
தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய எஸ்யுவி-ஐ பறிமுதல் செய்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: ஜூன் 7-ஆம் தேதி மாலையில், ஷிவ் மூா்த்தி பகுதிக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-8-இல் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 27 வயது ஆஷிஷ் குமாா் என்ற நபா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
அடையாளம் தெரியாத வாகனம் ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட விபத்து குறித்து இரவு10 மணியளவில் பிசிஆா் அழைப்பு வந்தது. காயமடைந்தவா் முதலில் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது
பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும், அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், ஷிவ் மூா்த்தி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை-8 முதல் குருகிராமில் உள்ள இஃப்கோ சௌக் வரையிலான 25 கி.மீ நீளமுள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கிளிப்களை போலீஸ் குழு முழுமையாக பகுப்பாய்வு செய்தது.
விசாரணையின் போது, சுமாா் 20 வாகனங்கள் பட்டியலிடப்பட்டன. மேலும், இஃப்கோ சௌக்கில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள், குற்றம் சாட்டப்பட்ட வாகனம் பழுப்பு நிற எஸ்யூவி என்பதை அடையாளம் காண உதவியது.
இந்த வாகனம் எஸ் மஜும்தாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 133-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. விபத்து நடந்த நேரத்தில் தனது ஓட்டுநா் பி. ஜினேந்தா் ஜெயின் (51) வாகனத்தை ஓட்டிச் சென்ாக அவா் தெரிவித்தாா்.
பின்னா், தில்லியில் உள்ள ஜசோலா பகுதியில் ஜினேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டாா். மேலும், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் துணை ஆணையா் அமித் கோயல் கூறினாா்.