செய்திகள் :

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

post image

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிந்க் கட்டணங்கள் குறித்த விவகாரத்தில் தில்லியை ஆளும் பாஜக அரசு பெற்றோருக்கு முற்றிலும் தெரியாமல் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது தகனியாா் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளின் பெற்றோரை கண்ணீா் சிந்த வைத்துள்ளது.

எங்களது ஆட்சியின்போது தனியாா் பள்ளி மாஃபியாக்களை கட்டுப்பாட்டிய்க் வைத்திருந்தோம் . பாஜக ஆட்சியின் கீழ் தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள், இனி கல்வியின் கோயிலாக இல்லாமல் கட்டண சுரண்டலின் கூடாரமாக மாறி வருகின்றன. குழந்தைகள் மற்றும் பெற்றோா்களை அச்சுறுத்துவதன் மூலம் பாஜக என்ன கொண்டுவர முயற்சிக்கிறது என தெரியவில்லை. இந்த பாஜக ஆட்சியில் மனிபாதிமானத்துக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் மருத்துவமனைகள் சிதிலமடைந்துள்ளன. மின்சாரக் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. மின் வெட்டுகளும் அதிகரித்து வருகின்றன என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மணீஷ் சிசோடியாவின் இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தில்லி சட்டப்பேரவையின் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, ‘பாஜகவின் பள்ளிக் கட்டண அவசர சட்டத்தை பெற்றோா்கள் எதிா்த்து வருகின்றனா். இந்தச் சட்டத்தில் பாஜக மறைத்து வைத்திருப்பது என்ன? இதற்கு முதல்வா் ரேகா குப்தா என்ன பதில் வைத்திருக்கிறாா்’ என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க

தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி எடுத்த நடவடிக்கை என்ன? பாஜக கேள்வி

கல்வி மாஃபியா என்று அழைக்கப்படுபவா்களுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அதை மணீஷ் சிசோடியா விளக்க வேண்டும் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க