மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை
தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்கள் கூறுகையில், அதிகாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
மால்வியா நகரின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அந்த இடத்தைப் பார்வையிட்டு குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
"பி2 சஃப்தர்ஜங் என்க்ளேவில் குடியிருப்பாளர்களும் நானும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அங்கு அமைக்கப்பட்ட ஒரு மொபைல் கோபுரம் நேற்று இரவு விழுந்தது.
இது பகலில் விழுந்திருந்தால் அல்லது பி2 கட்டடங்களை நோக்கி விழுந்திருந்தால் என்ன செய்வது? அத்தகைய அலட்சியம் குற்றமாகும்!" என்று பாரதி எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
A mobile tower, erected in B2 Safdarjung Enclave inspite of heavy protests by residents and myself, fell yesterday night. What if this had fallen in day time or towards the buildings of B2??
— Somnath Bharti (@attorneybharti) June 15, 2025
Such callousness is criminal! pic.twitter.com/UT2DBiyr4x