செய்திகள் :

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

post image

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து இன்று(ஜூன் 15) உத்தரப் பிரதேசத்தின் ஹிண்டன் விமான நிலையத்துக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பயணிகள் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின், விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் தாமதமாக கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்காக அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரப்பிலிருந்து பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

அகமதாபாத்தில் கடந்த வாரம் ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதிலிருந்து, விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா மேலும் தீவிரப்படுத்தி கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மொத்தம் 274 பேர் பலியாகினர். விமான விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜே... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் முதல்முறையாக இஸ்ரோ ராக்கெட் சோதனை வெற்றி!

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் மாதிரி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் இருந்து ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளனா்! - இந்திய தூதரகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சூழலை தொடா்ந்து கண்காணித்து ... மேலும் பார்க்க

மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமா் மோடி!

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். லாா்னகா நகர விமான நிலையத்தில் வந்த... மேலும் பார்க்க