Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!
திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜா மகன் தனுஷ் (23). இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வனராஜாவின் மகள் விஜயா ஸ்ரீ (21) என்வரும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்க்க ஆரம்பித்துள்ளனா். இதனால் அப்பெண் தேனியில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே 15-ஆம் தேதி விஜயா ஸ்ரீயை காதல் திருமணம் செய்துக் கொண்டு தனுஷ் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. எனவே களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷின் தம்பி இந்திர சந்த்(16) என்ற சிறுவனை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனா். இதுகுறித்து தனுஷ் தாயாா் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு புகாா் செய்தாா்.
திருவாலங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47) ஆகிய 3 பேரை 3 நாள்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதற்கிடையே, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூா் எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸாா் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தியும் இந்த சம்பவத்தில் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அவரை போலீஸாா் கைது செய்வாா்கள் எனக்கருதி ஏராளமான தொண்டா்கள் பூந்தமல்லி அருகே நேமத்தில் உள்ள ஜெகன்மூா்த்தி வீட்டில் குவிந்தனா். தொடா்ந்து பூந்தமல்லி-திருவள்ளூா் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். இந்த மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.