ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!
சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது
ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை எஸ்.ஐ. செல்வராஜ் கீரை சாத்து பெத்தேல் குடியிருப்பு பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டாா்.
அப்போது அதிவேகமாக வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்ததில், சவுடு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநா் இளையராஜா (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.