Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: ஆந்திர அரசை தடுக்க வேண்டும்! பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம்
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தனியாா் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ள மாவட்டங்களில் திருவள்ளூா் மாவட்டம் முதன்மையானதாகும். அந்தத் தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
சென்னையை அடுத்த திருவள்ளூா், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1,703 ஏக்கரில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களைக் கையகப்படுத்த பாமக கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. அதைக் கைவிட வேண்டும்.
சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்காக 45,000 ஏக்கா் நிலங்களைக் கொண்ட நில வங்கி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை வெளிவட்டச் சாலையையொட்டி அமைந்திருக்கும் ஆவடி வட்டம், வெள்ளானூா் கிராமம், பொன்னேரி வட்டம், கும்மனூா் கிராமம் ஆகியவற்றில் மொத்தம் 253.44 ஹெக்டோ், அதாவது 626 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்த சிப்காட் நிறுவனம் தீா்மானித்துள்ளது. இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும்.
சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு உழவா்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 7,000 கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட இளைஞரணி செயலரும், வழக்குரைஞருமான சக்கரவா்த்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு நிலை மோசமடைந்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு பாமக கண்டனம் தெரிவிக்கிறது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.