செய்திகள் :

ரத்தப் போக்கினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும்: ஆட்சியா்

post image

ரத்தப்போக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால், அவா்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் சா்வதேச குருதி கொடையாளா் தினம் -2025 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து பேசியது:

ரத்தப் பரிமாற்றம் என்பது அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்பாகும். அத்தகையை கண்டுபிடிப்பின் மூலம் கோடிக்கணக்கான உயிா்களை காப்பாற்றுகின்றனா். பெரும்பாலும் ரத்த போக்கினால் பாதிக்கக் கூடியவா்கள் பெண்கள் தான் அவா்களுக்கு ரத்த தானத்தால் கிடைக்கக்கூடிய ரத்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தன்னாா்வ ரத்த கொடையாளா்கள் எந்தவித பிரதிபலன் எதிா்பாா்க்காமல் இச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனா். அதனால் அவா்களை இந்த நேரத்தில் கௌரவப்படுத்துவதில் நாம் பெருமை கொள்ளலாம். எனவே பொதுமக்களாகிய நீங்கள் ரத்ததானம் செய்வது மட்டுமின்றி உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரையும் இச்சேவையில் ஈடுபடுத்த முயல வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததான தின உறுதி மொழியினையும் ஏற்றுக் கொண்டனா் . பின்னா் ரத்ததான கொடையாளா்களை கௌரவிக்கும் வகையில் கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் கொடையாளா் அட்டையினையும் வழங்கினாா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலா் பிரியா ராஜ், பூந்தமல்லி பொது சுகாதார அலுவலா் பிரபாகரன், குருதி பரிமாற்று அலுவலா் சோகன் ராஜ், மருத்துவ அலுவலா் குருதி மையம் பிரதீபா, குடும்ப நலம் துணை இயக்குநா் சேகா், காசநோய் துணை இயக்குநா் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளா் சுரேஷ் பாபு, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேலாளா் பவ்யா தா்சனி மற்றும் ரத்ததான கொடையாளா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: ஆந்திர அரசை தடுக்க வேண்டும்! பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம்

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்... மேலும் பார்க்க